Total Pageviews

Sunday, November 25, 2012

கண்ணன் வருவான் கதை சொல்லுவான்

கண்ணன் வருவான் கதை சொல்லுவான்
வண்ண மலர் தொட்டில் கட்டித் தாலாட்டுவான்
குழலெடுப்பான் பாட்டிசைப்பான்
வலம்புரிச் சங்கெடுத்துப் பாலூட்டுவான்
வலம்புரிச் சங்கெடுத்துப் பாலூட்டுவான்
(கண்ணன் வருவான்)

பச்சை வண்ணக் கிளி வந்து பழம் கொடுக்க
பட்டு வண்ணச் சிட்டு வந்து மலர் கொடுக்க
கன்னங்கரு காக்கை வந்து மை கொடுக்க

கண்ணன் மட்டும் கன்னத்திலே முத்தம் கொடுக்க
முத்தம் கொடுக்க...முத்தம் கொடுக்க...
தத்தித் தத்தி நடக்கையில் மயில் போலே
திக்கித் திக்கி பேசுகையில் குயில் போலே
கொஞ்சிக் கொஞ்சி எடுக்கையில் கொடி போலே
அஞ்சி அஞ்சி விழுவாய் மடி மேலே

உனக்கென்றும் எனக்கென்றும் உறவு வைத்தான்
இருவரின் கணக்கிலும் வரவு வைத்தான்
ஒருவரின் குரலுக்கு மயங்க வைத்தான்
உண்மையை அதிலே உறங்க வைத்தான்
உறங்க வைத்தான்...உறங்க வைத்தான்..
ஆரிரோ ஆரி ராரி ராரி ராரி ராரிரோ
ஆராரோ ஆரி ராரி ராரி ராரி ராராரோ
(கண்ணன் வருவான்)ஆரிரோ ஆரி ராரி ராரி ராரி ராரிரோ
ஆராரோ ஆரி ராரி ராரி ராரி ராராரோ
(கண்ணன் வருவான்)

No comments:

Post a Comment