Total Pageviews

Thursday, October 28, 2010

குறிப்பு: பாரதியார் படத்தில் இந்த பாட்டை பாடிய மது பாலகிருஷ்ணன்

எதிலும் இங்கு இருப்பான் அவன் யாரோ
எனக்குள் இருப்பான் அறிவாரோ
தவழும் நதியை தரித்த முடியன்
ஆதியும் முடியும் அறிய முடியான்
எளிய அடியார் ஓதும் வேத நாதமாகி (எதிலும்)

வரிப்புலி அதழ் தரித்தவன் எழில் கண்டேன்
பிறப்பெனும் பிணி அறுப்பவன் துணை கொண்டேன்
தமிழ்க்கவி தரும் எனக்கொரு வரம்
தரத் திருவுளம் வேண்டும்
சகத்திர்க்கென்னை தரத் தகும் நெறி
வகுத்திடத் துணை வேண்டும்
ஆலம் கரு நீலம் எனத் தெரியும் கண்டன்
அண்டும் திருத்தொண்டன் எனும் அடியார்க் கொரு தொண்டன்
பற்று தலைக்கு நெருப்பவான்
ஒற்றைக் கணத்தில் அழிப்பவன்
நெற்றிப் பிறைக்குள் நெருப்பை வளர்த்து (எதிலும்)

தொடக்கமும் அதன் அடக்கமும் அவன் வேலை
நடப்பதும் அதை தடுப்பதும் அவன் லீலை
உடுக்களிள் சரம தொடுக்காதவன் தலைமுடிக்க நியவும்  கூடும்
பெருக்கலும் அதை வகுத்தலும் அதை கழித்தலும் அவன் பாடம்
மாறும் யுகம்தோறும் கணக்கின் படியாகும்
மண்ணும் உயர் விண்ணும் அவன் ஒரு கைப்பிடியாகும்
சட்டம் அனைத்தும் வகுத்தவன்
திட்டம் அனைத்தும் தொகுத்தவன்
ஒற்றப் படித்து முடித்த   உருதன் (எதிலும்)

No comments:

Post a Comment