Total Pageviews

Wednesday, November 3, 2010

Intha veenaikku theriyathu-இந்த வீணைக்கு தெரியாது இதை செய்தவன் யாரென்று

இந்த வீணைக்கு தெரியாது 
இதை செய்தவன் யாரென்று 
இந்த வீணைக்கு தெரியாது 
இதை செய்தவன் யாரென்று 
என் சொந்த பிள்ளையும் அறியாது 
அதை தந்தவன் யாரென்று
எனக்குள் அழுது ரசிக்கின்றேன்
இரண்டையும் மடியில் சுமக்கின்றேன்
இந்த வீணைக்கு தெரியாது 
இதை செய்தவன் யாரென்று 
மலையில் வழுக்கி விழுந்த நதிக்கு
அடைக்கலம் தந்தது கடல் தானே
தரையில் வழுக்கி விழுந்த கொடிக்கு
அடைக்கலம் தந்தது கிளை தானே
எங்கோ அழுத கண்ணீர் துடைக்க
எங்கோ ஒரு விரல் இருக்கிறது 
காகம் குருவிகள் தாகம் தீர
கங்கை இன்னும் நடக்கிறது
இந்த வீணைக்கு தெரியாது 
இதை செய்தவன் யாரென்று 
சொந்தம் பந்தம் என்பது எல்லாம் 
சொல்லி தெரிந்த முறை தானே
சொர்க்கம் நரகம் என்பது எல்லாம்
சூழ்நிலை கொடுத்த நிறம் தானே
உள்ளம் என்பது சரியாய் இருந்தால்
உலகம் முழுதும் இருக்கிறது
உதிரப் போகும் பூவும் கூட
உயிர் வாழ்ந்திடத்தான் துடிக்கிறது
இந்த வீணைக்கு தெரியாது 
இதை செய்தவன் யாரென்று 
என் சொந்த பிள்ளையும் அறியாது 
அதை தந்தவன் யாரென்று
எனக்குள் அழுது ரசிக்கின்றேன்
இரண்டையும் மடியில் சுமக்கின்றேன்
இந்த வீணைக்கு தெரியாது 
இதை செய்தவன் யாரென்று 

1 comment: